Wednesday, November 25, 2009

அன்பு தலைவா உன்னால் நாங்கள் உய்வுற்றோம் தாழ்ந்த தலை நிமிர உன் வழி காட்டல் தேவை தமிழன் நிமிர தமிழ் உயர தமிழ் தலைவன் உன் ஆயுள் பல நுறை தாண்ட எம் ஆயுளையும் தருவோம் நீங்கள் நீண்ட ஆயுளும் திடமான வலுவான உடல்நலமும் பெற உண்மையையும் சத்தியத்தையும் வேண்டுகிறோம்

Tuesday, November 24, 2009

தமிழ் வெல்ல பணி செய்வோம்!

நள்ளிரவில் காதிலெழும் நாதமணிப் பேரொலியில்
நாளை ஒரு பூ மலரும்
நல்ல சுடர் ஏற்றி வைத்து - நாங்கள்
தொழும் போதினிலே
நம்பும்!
நம் எதிரிச் சேனை வீழும்
பள்ளிகொள்ளும் வீரரது கல்லறையில் கண் சொரிந்து
மணி ஒலிகள் ஒலி எழுப்பி
மாவீரர் புகழ் பாட
தலைவன் உரை முடிந்தவுடன்
தமிழீழம் மலர்ந்ததென்று
தரணியெங்கும் வானுயர்ந்த புலிக்கொடிகள்
தலை நிமிர்ந்து ஆசைந்து ஆட
உள்ளம் உருகி, உணர்வோடு
உத்தமர்கள் துயிலுகின்ற
கல்லறையில்
நாங்கள்
கார்த்திகைப் பூச் சொரிந்து
தேசியத்தின் உயிரானவர்கள்
தேசத் தலைவனுடன்....செய்த பெரும்
ஈகமதை
பாடித் தினம் போற்றி
பாரெல்லாம்
தமிழ் வெல்ல
பணி செய்வோம்!


நன்றி - இன்போ தமிழ்

Saturday, November 21, 2009

மாவீரர் நினைவுகூறல் இன்றிலிருந்து ஆரம்பம்


மண்ணை நேசித்த மானமாவீரர்களுக்கு எங்கள் வீர வணக்கம்

Thursday, November 19, 2009

தீயில் வெந்த தியாகமே


தீயில் வெந்த தியாகமே
இந்நாளில் உன்னை நினைத்து
உள்ளுறுதியை மேலும்
உரமேற்றுவோம்


தீராது தாயக விடுதலை தாகம் அதை அடையும் வரை
குறையாது எங்கள் வேகம்

Saturday, November 14, 2009

மான மாவீர்களுக்கு வீர வணக்கம்

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே!
இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? குழியினுள் வாழ்பவரே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்.

நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே நாமும் வணங்குகின்றோம்
உங்கள் கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்
சாவரும் போதிலும் தணலிடை வேகிலும் சந்ததி தூங்காது
எங்கள் தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்.

உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது உரைத்தது தமிழீழம்
அதை நிரை நிரையாகவே நின்றினி விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர(சு) என்றிடுவோம்
எந்த நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்

Friday, August 21, 2009

உலக தமிழர் பிரகடனம்




உலகத் தமிழர் பிரகடனம் வருமாறு :

1. ஈழத் தமிழ் மக்களின் மரபு வழி தாயகத்தில் அவர்களுக்கு முழுமையான மனித, ஜனநாயக உரிமைகள் வழங்கிடவும், அதற்கேற்ற அரசியல் அமைப்பிற்கு உத்தரவாதம் தரக்கூடிய அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காக உலக மக்களின், அரசுகளின் ஆதரவைத் திரட்டிடவும், ஈழத் தமிழ் மக்கள் ஒப்புக்கொள்ளக் கூடியத் தீர்வு ஒன்றை அவர்களின் பிரச்சனையைத் தீர்க்கும் ஒரே வழி என்பதிலும் நாங்கள் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.

2. தங்கள் தாயகத்திலும், உலக நாடுகளிலும் புலம் பெயர்ந்திருக்கக்கூடிய ஈழத் தமிழர்கள் அனைவரும் அவரவர்களின் ஊர்களிலும், வீடுகளிலும் மீண்டும் குடியேறவும், அமைதியான, இயல்பான, சுதந்திரமான வாழ்க்கையை நடத்தவும் துணை நிற்க நாங்கள் உறுதி பூணு‌கிறோ‌ம்.

3. தமிழர் தாயக மண்ணில் அத்துமீறி உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களையும், சிங்கள இராணுவ முகாம்களையும் மற்றும் இராணுவ ரீதியான அமைப்புகளையும் வெளியேற்ற வேண்டும் என ஐ.நா.வை வற்புறுத்த நாங்கள் உறுதி பூணுகிறோம்.

4. இலங்கையில் மனித நேய உணர்வை மீறித் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளையும், கொலைகளையும் செய்த சிங்கள இராணுவ அதிகாரிகளும், அவர்களை ஏவிவிட்ட சிங்கள அரசியல் வாதிகளும் சர்வதேச நீதிமன்றத்தில் போர்க் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவதற்கு உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள நாங்கள் உறுதி பூணுகிறோம்.

5. உலகில் உள்ள மற்ற தேசிய இன மக்களைப் போல முழுமையான, இறைமை உள்ள மக்களாக வாழும் உரிமையில் தங்களின் எதிர்காலத்தை தாங்களே முடிவு செய்துகொள்ளும் உரிமையும் ஈழத் தமிழர்களுக்கு இயற்கையாக உண்டு என்பதையும் அந்த வாழ்வுரிமையை அவர்கள் நிலைநிறுத்திக்கொள்ள அவர்களுக்கு தோள் கொடுத்து துணை நிற்க உலகத் தமிழர்களாகிய நாங்கள் உறுதி பூணுகிறோம்.

6. அளப்ப‌ரிய தியாங்களைச் செய்த ஈழத் தமிழ் மக்களும், அவர்களுக்காக இறுதிவரை போராடிய போராளிகளும், வீறுகொண்டு நடத்திய விடுதலைப் போராட்டம் பல நாடுகளின் கூட்டுச் சதியின் விளைவாக பின்னடைவைச் சந்திக்க நேர்ந்திருப்பது தற்காலிகமானது. மீண்டும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதற்கும், வெற்றி பெறுவதற்கும் அந்த மக்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வு உருவாவதற்கும் நாங்கள் முழுமையாக உதவுவோம். அதற்காக எங்களை முற்றிலுமாக ஒப்படைத்துக்கொண்டு எத்தகைய தியாகத்திற்கும் தயாராக இருப்போம் என உலகளாவிய தமிழர்களாகிய நாங்கள் உறுதி பூணுகிறோம்.

Saturday, August 1, 2009

Thursday, July 16, 2009

ஓலம்






கடலோரம் பெருவனங்கள்
கரைநெடுக நெடுமரங்கள்
படல்வீடே ஈழமுகம்
பண்பாடே ஈழநிலம்

படகெல்லாம் மீன்கள்வளம்
படுகரையில் உப்பின் அளம்
குடிதோறும் தென்னைவளம்
குறும்பலா தரைதவழும்
கரையோரம் நெய்தல்நிலம்
கரைதாண்டி முல்லைவளம்
மருத நிலம் நடுநாடு



மண்மனக்கும் வயற்காடு
பழந்தமிழர் கொல்லையயலாம்
பனைமரங்கள் எல்லைகளாம்
பழம்பதியின் முதற்குறியே
பனைமரத்தின் முகவரியே
நான்குநிலம் கொண்டதனால்
நானிலமே எமதீழம்
நன்னிலத்தில் நெல்வாழை
கன்னலுக்குக் கரும்பாலை
நான்குநிலம் கொடுங்கோலாய்
அஞ்சு (ம்)நிலம் ஆனகதை
ஈழயினம் சிங்களத்தால்
ஏழையினம் ஆனகதை
அஞ்சும்நிலம் தடைமீறி
மிஞ்சிநின்ற வேரின்கதை
சிங்கத்தை வேங்கையினம்
சீறிநின்ற போரின்கதை
ஞாலமெல்லாம் எம்மினத்தை
நடுக்களத்தில் விற்றகதை
ஓலமிட்டு லட்சம்பேர்
உலைக்களத்தில் வெந்தகதை
கண்ணுள்ளார் காணவில்லை
காதுள்ளார் கேட்கவில்லை
குழந்தைகளை மீட்கவில்லை
குமரிகளைக் காக்கவில்லை
வதை தடுப்பதற்காய்
வேண்டினோம் டெல்லிக்கொடி
வதையை நிறுத்திவிட
வணங்குகிறோம் தொப்புள்கொடி
எக்கொடியும் வரவில்லை
இக்கொடியர் போர்நிறுத்த
வக்கரித்த தேர்தலிலே
வாக்களித்த தமிழர்களே
மீளவும்யாம் எண்ணுகையில்
நாளைஉயிர் யார் கையில்?
ஈழமின்று நிலச்சிறையாய்
வேலியிட்ட வெலிக்கடையாய்...
ஒருகுவளை நீருக்கும்
ஒருகவளம் சோற்றுக்கும்
எம்நிலத்தில் கையேந்தி
எம்குலத்தோர் வேகையிலும்
நம்பிக்கை தளரவில்லை
நட்சத்திரம் இருளவில்லை
நம்பிக்கை உயிர்த்தெழும்பும்
சரித்திரத்தைப் பெயர்த்தெழுதும்!

-கவிஞர் தணிகைசெல்வன்

Friday, June 12, 2009

¸¡¸¢¾ ¦À¡Ú츢¾Éõ

«ö¡,
¾Á¢ú ¯Ä¸ Òò¾¢ ƒ£Å¢¸§Ç, ¯í¸û ¾¡û À½¢óÐ ÁýÈ¡Ê §¸ðÎ즸¡ûÅÐ ´ýÚ ¾¡ý. ¾¨ÄÅ÷ þÕ츢ȡ÷ þø¨Ä ±ýÈ ¸Õòо¡¼ø ¾üºÁÂõ §¾¨Å¡. «Å÷ Ò¸ØÄÌ ±ö¾¢Â¢Õó¾¡Öõ ÀÚ¢ø¨Ä ¯í¸û Òñ½¢Â ¸ÕòÐì¸û ÓÄõ Á츨Ç, Áì¸Ç¢ý ¸ÅÉò¨¾ º¢¾ÈÊì¸ §Åñ¼¡õ, §ÁÖõ «Å÷ þø¨Ä þÉ¢ ¬ð¼õ ÓÊó¾Ð, þø¨Ä þø¨Ä «Å÷ ÅÕÅ¡÷, þÅ÷ ¸¡ôÀ¡÷, ±É ÀÄÅ¡Ú Á츨Ǻ¢ó¾¢ì¸ àñ¼ §Åñ¼¡õ. 3.5 þÄðîºõ Áì¸¨Ç À¡Õõ, «Å÷ «øÄ¨Ä Å¢ÎÅ¢ôÀ¡÷ ÂÕÁ¢ø¨Ä, Å£½¢ø ¡Õõ ¸¨¾ì¸ §Åñ¼¡õ, ¯Ä¸¾Á¢Æ÷¸Ç¢ý ¬¾Ã§Å¡Î «ù÷¸ÙìÌ §¾¨Å¨Â ӾĢø â÷ò¾¢ ¦ºö §ÅñÎõ. þÐ ¿õ Ó¾ø ¸¼¨Á. þÃñ¼¡ÅÐ ¿ÁÐ ¯Ã¢¨Á Å¡úÅ¡¾Ãô §À¡Ã¡ð¼ò¾¢üÌ ¿¡õ ¾¡ý §À¡Ã¡¼ §ÅñÎõ ±É§Å Áì¸§Ç ÐÅÇ §Åñ¼¡õ. ÐÊôÒ¼ý ¿¢Á¢÷óÐ ¿¢øÖí¸û. ±ûÙõ À¨¸ º¢¾È¢§Â¡Îõ.
Á¡üÚ ¸Õò¾¡Ç÷¸§Ç ÒÄ¢¸û ¾¡ý ¾üºÁÂõ þø¨Ä§Â, ¿£í¸û ±øÄ¡õ Áì¸¨Ç ÀüÈ¢ ±ñÏÀÅ÷¸û, «ù÷¸Ù측¸ §À¡ÃÎÀÅ÷¸û ¾¡§É, ¾Â× ¦ºöÐ ¿£í¸§Ç Áì¸¨Ç ´Õí¸¢¨ÉòÐ §À¡Ã¼Ä¡§Á, «Å÷¸Ù측¸ ¾¨Ä¨Á ²ü¸Ä¡§Á. «¨¾Å¢ÎòÐ ¿£í¸¦Ç¡ÕÒÈõ §À¡Ã¡Ç¢¸û, «Å÷¸Ç¢ý ¬¾ÃÅ¡Ç÷¸û Áü§È¡ÕÒÈõ ±¾¢÷ ¿¢üÀÐ ¿ÁìÌ ¿ýÈýÚ, þÉ¢ ÅÕõ ¸¡Äí¸Ç¢ø ¾Á¢ú ¾¡Â¸õ ¿ÁÐ ã¸ ¿ÁÐ ¾Á¢Æ£Æ Ţξ¨ÄìÌ ¾¨Ä ¦¸¡Îí¸û.
þýÉÓõ ¾ýÁ¡ÉÓõ ¿õÀ¢ì¨¸Ôõ ¯ûÇ ´÷ ¾Á¢Æý

Sunday, May 24, 2009

±í¸¼ Á츧Ç???








±í¸¼ Á츧Ç???

±í¸¼ Áì¸û ±í¸¼¡ À¡Å¢í¸Ç¡

Thursday, May 14, 2009

இராணுவம் இரசாயன தாக்குதலிற்கு தயார்... பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் பலியாகும் அவலம்...

சிறிலங்கா இரசாயணத் தாக்குதலுக்குத் தயாராகின்றது


சிறிலங்கா இராணுவம் இரசாயணத் தாக்குதலுக்கு தயாராவதாக தெரியவருகின்றது. கடந்த சில மாதாங்களாக மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கையில் பெரும் வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள முடியாது திணறும் சிறிலங்கா இராணுவம் பொது மக்கள் மீது மீண்டும் ஒரு இரசாயணத் தாக்குதலை இன்று அல்லது நாளை மேற்கொள்ளக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவ்வாறான தாக்குதல் ஒன்றுக்கு படையினர் முற்பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் களமுனைச் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. இத்தாக்குதலுக்கு முன்னேற்பாடாக இவ்வாறான ஒரு தாக்குதலை பொது மக்கள் மீதும் இராணுவத்தினர் மீதும் விடுதலைப் புலிகள் மேற்கொள்ளப்போவதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகம் செய்தியொன்றை பரவவிட்டுள்ளது.

இதன் மூலம் விடுதலைப் புலிகளே இவ்வாறான தாக்குதலை நடத்தியதாக கூற முனைவதுடன், பெரும் இன அழிப்பொன்றை மேற்கொள்ளவும் படையினர் தாயாராகி வருகின்றனர். கடந்த மாதம் இவ்வாறான ஒரு இரசாயணத் தாக்குதலை மேற்கொண்டு பெரும் அழிவைப் படையினர் ஏற்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, இந்த அழிவினைத் தடுத்து நிறுத்த புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் காத்திரமான பங்களிப்பை வழங்கவேண்டும் எனவும், சிறிலங்காவின் இந்தப் படுகொலையை உடனடியாகத் தடுத்து நிறுத்த மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட முன்வரவேண்டும் சிறிலங்காவின் போரியல் சட்ட விதிகளுக்கு முரணாக பாவிக்கப்படும் தடை செய்யப்பட்ட ஆயுதப் பாவனைகளுக்கு எதிராக புலம்பெயர்ந்த மக்கள் கிளர்ந்தெழுந்து போராட வேண்டும். அதுவே இந்த மோசமான இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தும்.

thanks to athirvu.com

Tuesday, May 12, 2009

குற்றவாளி"


ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை தொடா்பாக தமிழ்நாட்டு ஊடகங்களின் மௌனமும் புதுடில்லி ஆட்சியாளர்களின் தமிழ்நாட்டு மக்கள் மீதான ஏளனமும் தொடர்பாக அலசுகின்றார் தமிழ்நாட்டில் இருந்து அ.பொன்னிலா.

"இராணுவச் சீருடையில் வந்த அவர்கள் மூன்றாவது பெண்ணின் உடைகளைக் களைந்தபோது நான் எனது கண்களை மூடிக்கொண்டேன். இம்மாதம் என் ஊதியத்தில் ஏதேனும் வெட்டு விழுமோ என்பதை நினைத்தபோது இறுக்க மூடிய கண்களை நான் கடைசி வரை திறக்கவே இல்லை."

ஜேர்மனியின் நாஜி முகாமில் யூதர்களுக்கு எதிரான இனப்படுகொலையின் போதோ,
பாலஸ்தீனத்தில் இன்று அமெரிக்க,
யூத அரசு பயங்கரவாதத்திற்கு எதிராகவோ,

ருவாண்டாவின் டுட்சிக்களுக்கு எதிரான ஹுட்டுக்களின் படுகொலைக் காலங்களின் போதோ எழுதப்பட்டதல்ல இந்தக் கவிதை.

ஈழத்தில் அன்றாடம் இனச் சுத்திகரிப்பில் நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்படும்போது அதைப் பார்த்து மௌனமாக இருக்கும் தமிழ்நாட்டு ஊடகங்களையும், ஊடக நண்பர்களையும் நினைத்த போது நான் எழுதித் தொலைத்த கவிதைதான் இது,

மௌனம் என்பதன் நேரடிப் பொருளான சம்மதம் என்பதை இலங்கையில் நடக்கும் அப்பட்டமான இனப்படுகொலைப் போரில் இந்தியாவின் நிலையில் இருந்து நாம் புரிந்து கொள்கிறோம்.

ஆனால், சம்மதம் என்கிற நிலையையும் கடந்து இன்றைய இந்தியா ஒட்டு மொத்த ஈழத் தமிழர் அழிப்பிற்கும் இலங்கை அரசோடு சேர்ந்தியங்குகிறது என்பதும் உண்மையாகி இருக்கிறது.

ஆளும் திமுக, காங்கிரஸ் கூட்டணியின் நெருக்கடியோடு ஊடக முதலாளிகளின் தொழில் ரீதியான தொடர்பு என்று இன்று ஆளும் திமுகவின் விருப்பங்களுக்கு ஏற்ப ஈழத்தில் அன்றாடம் கொல்லப்படும் மக்களின் செய்திகள் தமிழக ஊடகங்களில் முக்கியத்துவமற்று எழுதப்படுகின்றன.

கலைஞர் கருணாநிதியின் குடும்ப ஊடகங்களோ நேரடியாக இலங்கையில் போரே நடைபெறவில்லை என்பது போன்று பொய்ச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

அல்லது வவுனியா முகாமில் இராணுவ வீரன் ஒரு தமிழ் குழந்தைக்கு பிஸ்கெட் கொடுக்கிற படத்தைப் போட்டு சென்னையில் இருக்கும் சிறிலங்கா துணைத் தூதரக அதிகாரி அம்சாவுக்கு வாலாட்டிக் கொண்டிருப்பதன் மூலம் கொல்லப்பட்ட பல நூறு ஈழத் தமிழ் குழந்தைகளின் கொலைகளை கேள்விகளற்ற ஒன்றாக பெரும்பாலான தமிழ்நாட்டு ஊடகங்கள் மாற்றுகின்றன.

கொல்லப்படும் மனித உயிர்கள் குறித்த அக்கறை சிறிதளவு கூட இவர்களிடம் இல்லாமல் போனதை நாம் சமகாலத்தில் எதிர்கொள்கிறோம்.

தமிழ்நாட்டு ஊடகங்களின் மௌனம் இப்படி இருக்க, வட இந்திய ஆங்கில ஊடகங்களோ போர் நடைபெறும் பூமியான ஈழத்துச் செய்திகளில் இலங்கை அரசாங்கம் எதைக் கொடுக்கிறதோ அதை அப்படியே வாந்தி எடுத்து கொட்டிக் கொண்டிருக்கின்றன.

இவர்கள் புலிகளின் தோல்விக்கான நேரம் ஒன்றை கணித்துக்கொண்டு அதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

புலிகளின் தோல்வியை ஒட்டுமொத்த ஈழ மக்களின் தோல்வியாக மட்டுமல்லாமல், இந்தியத் தமிழ் மக்களின் தோல்வியாகப் பார்க்கிற பார்வையின் வெளிப்பாடுகள்தான் இந்த ஆங்கில ஊடகங்களில் அப்பட்டமான இனவாதமாக உருவாகி இருக்கிறது.

இது எந்த அளவுக்கு மோசமான இனவாதச் சித்தரிப்பாக மாறியிருக்கிறது என்றால் வழக்கறிஞர்கள் ஈழத் தமிழர்களுக்காக போராடிய போது அதை பதிவு செய்கிற ஆங்கில ஊடகங்கள் அதை (pro tamils) அதாவது தீவீர தமிழ் ஆதரவாளர்கள் என்று பதிவு செய்கிறார்கள்

தமிழ்நாட்டில், தமிழர்களால், ஈழத் தமிழர்களுக்காக நடத்துகிற போராட்டத்தை தீவிர தமிழ் ஆதரவாளார்கள் என்று பதிவு செய்கிற திமிர் எங்கிருந்து வருகிறது.

இந்தியத் தமிழர் மீதான வெறுப்புதான் ஈழத் தமிழர் படுகொலைச் செய்திகளையும் பதிவு செய்ய மறுக்கிறது.

ஈழத்தில் புலிகள் வலுப்பெற்றால் அது இந்தியத் தமிழர்களுக்கான எழுச்சி அரசியலாக மாறிவிடும் என்றும் பார்க்கப்படுகிறது.

தமிழ் பேசும் பத்திரிகையாளர்கள் என்றால் சென்னையிலேயே செட்டில்மெண்ட்.

அதுவே ஆங்கிலம் பேசும் மேதாவிப் பத்திரிகையாளர்கள் என்றால் கொழும்புக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டுகிறார்கள்.

பெரும்பாலான ஊடகவியாலாளர்கள் இலங்கை அரசால் வழங்கப்படும் சில நூறு டாலர்களுக்கு விலை போய்விட்டார்கள்.

'மக்கள்' தொலைக்காட்சி, அரசியல் காரணங்களுக்காக ஈழத்துச் செய்திகளுக்கு தற்போது முக்கியத்துவம் கொடுக்கும் 'ஜெயா' தொலைக்காட்சி தவிர்த்து பெரும்பாலான தமிழக ஊடகங்களில் நிலை இதுதான்.

இன்றைய தமிழகத்தில் இனப்படுகொலை பற்றிய விழிப்பு நிலை எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது.

அதே நேரத்தில் போருக்குப் பிந்தைய பேச்சான தனி ஈழம், அல்லது அதிகாரப் பகிர்வு குறித்து பேசப்படுகிறது. பேசப்படுவதோடு ஈழம் முழுமையான தேர்தல் பிரச்சினையாக மட்டுமே மாற்றப்பட்டிருக்கிறது.

தமிழக அரசியல்வாதிகளிடம் இன்றிருக்கும் வேகம் வாக்கெடுப்பு முடிந்த பிறகு இருக்குமா? என்பதும் தெரியாது ஆனால் நிரந்தரமான ஈழ விடுதலை ஆதரவாளர்களை கவர்ந்திருக்கும் ஜெயலலிதாதான் இன்று இவர்களுக்கு உற்சாக டானிக்.

தமிழ்நாடு தொடர்பான அச்சம் டில்லி காங்கிரஸ்காரர்களிடம் எந்த அளவுக்கு பரவிக் கிடக்கிறது என்பதற்கு இரண்டு உதாரணங்களைச் சொல்ல முடியும்.

ஒன்று சோனியாவின் வருகைக்காக சென்னை தீவுத்திடலில் பொதுக்கூட்ட மேடை ஒன்று அமைக்கும் பணி நடைபெற்றது. மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிலரை அழைத்து மேடையை நோக்கி செருப்பை வீசச் சொல்லி செருப்பு விழுந்த தூரத்தை அளந்து அந்தப் பகுதிக்கு வெளியே பார்வையாளர்கள், பத்திரிகையாளர்கள், அமரும் பகுதியை அமைத்தார்களாம்.

அது போலவே பிரதமர் மன்மோகன் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்திக்க வந்தபோது பத்திரிகையாளர்கள் யாரும் கையில் எடுத்து வீசும் படியான எந்தப்பொருளையும் சந்திப்பு அறைக்கு கொண்டுசெல்ல அனுமதிக்கப்படவில்லை.

செல்போன், தண்ணீர் பாட்டில், போன்ற பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படாததோடு மன்மோகன் அமரும் மேடைக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையில் மிக நீண்ட இடைவெளி இருந்தது.

சோனியாவுக்கும் மன்மோகனுக்கும் மக்களுக்கும் இடையே மேடைகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த இடைவெளிதான் இனப்படுகொலை மீதான தமிழக மக்களின் கோபம்.

இந்த இருவருமே சென்னையை விட்டுக் கிளம்பிய பிறகு காவல்துறை அதிகாரிகள் விட்ட நிம்மதிப் பெருமூச்சுதான் தமிழக மக்களின் இனப்படுகொலை மீதான் தார்மீக ரீதியிலான கோபம்.

சரி, மன்மோகன் எதற்காக சென்னைக்கு வந்தார். வந்து என்ன சொன்னார். என்றால் அவரது பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதானமாக இருந்தது ஐந்து விடயங்கள்தான்.

1. வடக்கு மக்களின் பாரம்பரிய பிரதேசங்களில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளை அகற்ற இந்திய இராணுவத்தினர் விரைவில் இலங்கைக்குச் செல்வார்கள். இந்திய இராணுவத்தினர் கண்ணிவெடிகளை அகற்றிய பிறகு முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் மக்கள் விரைவில் அவர்களின் வீடுகளுக்குத் திரும்புவார்கள்.

2. இப்போது எங்கள் கவனமெல்லாம் போரால் பாதிக்கப்பட்டு முகாம்களுக்குள் இருக்கும் மக்களைப் பற்றித்தான். அவர்கள் சம உரிமை பெற்று வாழ வேண்டும் என்பது பற்றித்தான்.

3. இலங்கை ஒரு பூரண இறையாண்மை உள்ள நாடு அப்படியான தேசத்திற்குள் நாம் தலையிடுவது முடியாது. அண்டை நாட்டிற்கு இராணுவ உதவிகள் செய்வதும் பயிர்ச்சிகள் கொடுப்பதும் சகஜமான ஒன்று.

4. இலங்கைத் தமிழர்கள் சகல உரிமைகளையும் பெற்று ஒன்றுபட்டு இலங்கைக்குள் வாழ இந்தியா தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

5. இந்தியாவின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசு போரில் கனரக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை.

என்பதான ஐந்து கருத்துக்கள் பொதுவாக இருந்தது.

மேலே உள்ள ஐந்து கருத்துக்கள். குறித்தும் நாம் பல முறைப் பேசியாகி விட்டது.

இந்தியா இலங்கைக்கு இராணுவ உதவி செய்யவில்லை என்று இந்தியத் தரப்பும் இதுவரை மறுக்கவில்லை. மாறாக வெளிப்படையாகவே ஒத்துக்கொள்கிறது.

அது போல போர் நிறுத்தம் குறித்தும் இந்தியத் தரப்பு இதுவரை இலங்கை அரசிடம் கேட்கவில்லை.

சென்னைக்கு வந்த மன்மோகன் மறந்தும் போர் நிறுத்தம் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை.

மாறாக எப்போதெல்லாம் இந்தியத் தரப்பினர் கொழும்புவுக்கு சென்று பேசி வந்தார்களோ அப்போதெல்லாம் ஈழ மக்கள் மீதான இனப்படுகொலை முழு வீச்சுப் பெற்றது என்பதற்கு மிகச் சரியான சான்றாக மன்மோகன் சென்னையில் இருந்து கிளம்பிச் சென்ற சில மணி நேரங்களுக்குள் இலங்கை இராணுவம் தன் கொடூரத் தாக்குதலை தொடங்கி விட்டது.

கனரக ஆயுதங்களைக் கொண்டு 2 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களை இரக்கமற்ற முறையில் கொன்று குவித்திருக்கிறது.

நாம் தொடர்ந்து போர் நிறுத்தம் கேட்கிறோம். இவர்களோ கொல்லப்படுகிற நிர்க்கதியாய் விடப்படுகிற மக்களுக்கான நிவாரணங்கள் குறித்துப் பேசுகிறார்கள்.

அப்படியான நிவாரணங்களைச் செய்கிற யோக்கியதை இந்திய அரசுக்கோ தமிழக அரசிற்கோ இருக்கிறதா? என்றால் கொலைக்கு துணை போய்விட்டு சவங்களை அடக்கம் செய்ய பெட்டி தயாரித்து அனுப்புகிற செயலைத்தான் இந்தியா இப்போது ஈழத்தில் செய்து கொண்டிருக்கிறது.

இலங்கை இறையாண்மை உள்ள தேசம் என்றால்? ஈழ மக்கள் மீதான படுகொலையை தடுக்க இலங்கையின் இறையாண்மை மன்மோகனை தடுக்கும் என்றால் அப்படியான இறையாண்மை உள்ள தேசத்தில் கண்ணிவெடியை அகற்றுகிறோம் என்ற போர்வையில் இராணுவ வீரர்களை மட்டும் அனுப்புவது எந்த வகையில் இந்திய இறையாண்மைக்கு உகந்தது என்று ஒரு கேள்வியை யாராவது ஒரு பத்திரிகையாளர் கேட்பார் என்று எதிர்ப்பார்த்தோம்.

அதற்கான ஊடகச் சூழலே தமிழகத்தில் இல்லாதபோது நாம் மட்டும் புலம்புவதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்.

அண்டை நாட்டுக்கு ஆயுதப் பயிற்சியும் ஆயுதமும் வழங்குவது சகஜமென்றால் பாகிஸ்தானுக்கு இதே பயிற்சியை இந்தியா வழங்குமா?

அண்டை நாடான நேபாளத்தில் ஆட்சியமைத்த பிரதமர் பிரசந்தாவின் இராணுவத்துக்கு ஏன் இந்தியா பயிற்சியளிக்கவில்லை? மாறாக நேபாளம் சீனாவோடு நெருங்குகிறது என்பதற்காக நேபாளத்தில் இன்று அரசியல் ஸ்திரமற்ற சூழலை உருவாக்கியதே இந்தியாதானே?

நேபாளம் எந்த சீனாவோடு நெருங்குகிறதோ அதே சீனாவோடு இலங்கையும் நெருங்குகிறதே? இந்தியாவின் இந்துப் பிராந்திய நலன் கருதியாவது இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாமே? ஏன் சீனா இந்தியாவின் வடக்கு - கிழக்கில் விளையாடிக் கொண்டிருக்கிறது.

இப்பிராந்தியத்தின் சீனாவிடம் மோதி வெற்றிபெற முடியாது. என்கிற அச்சம் தானே இலங்கையில் இனப்படுகொலையில் இந்தியாவை கை நனைக்கத் தூண்டுகிறது.

மன்மோகன் வந்து சென்ற ஒரு இரவுக்குள் 2 ஆயிரம் கொலைகள். மறுநாள் மாலை சென்னை தீவுத்திடலில் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசுகிற சோனியா காந்தியோ இந்தியாவின் அழுத்தங்களால் இலங்கையில் போர் நின்றிருக்கிறது என்று பேசியிருக்கிறார்.

எவ்வளவு துணிச்சல் ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் இவர்கள் சொல்வதன் மூலம் பொய்யை மெய்யாக்கப் பார்க்கிறார்கள்.

ஒரு பிரதமர் பொய் பேசவும், பிரதமரை இயக்கும் ஒரு செல்வாக்குள்ள பெண்மணி பொய் பேசவும் பின்னால் இருந்து உற்சாகமளிப்பது தமிழ்நாட்டு முதல்வர் கருணாநிதிதான்.

இனப்படுகொலையில் பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டிய முதல்வரே பொய் சொல்கிறார். டில்லியில் இருந்து வந்து செல்கிற நாம் சொல்வது மட்டும் எப்படி பொய்யாக இருக்கும் என்று சோனியாவும், மன்மோகனும் பொய் சொல்கிறார்கள்.

பொய்யை உண்மை போலப் பேசுகிறார்கள்.

வளைக்குள் சிக்கியிருக்கும் முயல்கள் இரத்த வெள்ளத்தில் மிதப்பதைப் பார்த்து இவர்கள் ஏளனம் செய்கிறார்கள்.

இந்த நூற்றாண்டில் இது மன்னிக்க முடியாத மாபெரும் துரோகம். புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் கொல்லப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களின் இனப்படுகொலையின் சூத்திரதாரிகள் இவர்களே!

இன்றைக்கு ஈழம் என்கிற சுதந்திரமான தேசீய இன விடுதலைக் கருத்தியல் தமிழகத்தில் மிகவும் வலுப் பெற்றிருக்கிறது. அத்தோடு புலம்பெயர் நாடுகளில் ஒரு புதிய தலைமுறை உணர்வோடு வீதிக்கு வந்திருக்கிறது.

முப்பதாண்டுகால ஈழ விடுதலை ஆயுதப் போரில் இது மூன்றாம் தலைமுறைக்கான போராட்டம். அவரவர் வழியில் அவரவரால் இயன்ற அளவு போரடுவோம்.

இந்தியாவின் விருப்பத்திற்கிணங்க அல்ல, இரத்தவெறி கொண்ட பாசிச பயங்கரவாத இலங்கை அரசின் ஒடுக்குமுறைகளுக்கிணங்க அல்ல மாறாக நமக்காக நமது மக்களுக்காக குரல் கொடுப்போம்.

நமது மக்களை இனப்படுகொலைகளில் இருந்து காப்போம்.

உலகத்தை விழித்திருக்கச் செய்வோம்.

முதலில் போர் நிறுத்தம் செய்!

மக்களை அவர்களின் இல்லங்களுக்கு அனுப்பு.

இலங்கை இராணுவத்தை தமிழர் பகுதிகளில் இருந்து வெளியேற்று.

சுதந்திர தமிழீழத்தை அங்கிகரி..

இதுதான் இன்றைய உலகின் முன்னால் நாம் முன்வைக்க வேண்டிய முழக்கம்.

thanks to ponnila & Puthinam.com

Monday, May 11, 2009

தேசத்தின் குரல்

உந்தன் தேசத்தின் குரல்,
தொலைத்தூரத்தில் அதோ
சொந்த தேசம் உன்னை அழைக்கிறது வா தமிழா,
உனை அழைக்கிறது வலி நிறைந்த தாய் மண்
துன்பஙகளை அகற்ற உனை அழைக்கிறது
கண்ணீர் துடைக்கவேண்டும் உன் கரங்கள்,
அதில் செழிக்கவேண்டும் மக்கள்
இந்த தேசம் மலரட்டும்,உயரட்டும் உன்னாலே
மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே
அன்பு தாயாவள் அழைக்கிறாள் தமிழா
உந்தன் தேசத்தின் குரல்,
தொலைத்தூரத்தில் அதோ
சொந்த தேசம் உன்னை அழைக்கிறது வா தமிழா,

Sunday, May 10, 2009

Enna pilai seithayada magane tamilanaga piranthathi thavira



அன்பு மகனே,

என்ன பிழையட செய்தாய்,
எம்மகனாக பிறந்ததை தவிர,
இனி என்னட இருக்கு இழக்க,
உடல் கருகினலும்,
சொல்ல்னொன துன்பம் உடன் இருந்தலும்
உன் முகம் கன்டு உயிரொடு இருந்தொம்
இன்று உனை இழந்து இனி என்னடா செய்வோம்


வெம்பி வெடிக்குது எம் நெஞ்சம்!
வேதனையில் மூழ்கிக் கிடக்குது நம் தேசம்!
தஞ்சம் இல்லை என்று தானே இப்படிச் செய்தீர்கள்

உங்கள் நெஞ்சம் என்ன கல்லா?
கொஞ்சு மொழி பேசும் பஞ்சுபோன்ற
இந்த பிஞ்சுகள் என்ன பாவம் செய்தார்கள்

இருகை கூப்ப இறைவன் இல்லை .
மறுபடி பேச வார்த்தை இல்லை
ஒருபடி உயர உதவி இல்லை.
ஒருமித்து வாழ வழியும் இல்லை
உதவிக்கு யாருமில்லை
உபத்திரவத்துக்கு கோடி பேர்
எஙகளை கொல்ல ஆயுதமாம்,
ஆனால் எஙளுக்கு பெயர் தீவிரவதியாம்

வாழ்க சர்வதேசமும், அவர்களின் இறையாண்மையும்

Ayyoo enna kodumayada ,



The most irrresponsible world,
you must give proper replies for all these,
kindless humans, I wish you all to live long

Eyalathhu thavikkum oru nayinum ili pirappu

Saturday, May 9, 2009

நம் தாய்த்தமிழ் உறவுகளே! ஈழத்தமிழரைக் காப்பாற்ற இது இறுதிச் சந்தர்ப்பம்...

தமிழக உறவுகளே! ஓட்டுப் போடமுன் ஒரு நிமிடம்...!

நம் ஈழ மக்களின் துன்பங்களை, சொந்த மண்ணிலேயே அகதிகளாகி அவர்கள் படும் அவலங்களை வார்த்தைகளில் வரித்துவிடும் வல்லமை எழுத்துக்களுக்கு கிடையாது. ஆனாலும் சொல்லியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் மனந்திறந்த வரிகளோடு முயற்சிக்கின்றேன்... மனம் நிறைந்த வலிகளுடன்.


கொலைவெறிச் சிங்களத்தின் கொடூரக் கரங்களுக்குள் சிக்குண்டு சின்னாபின்னமாகின்றது ஈழதேசம். வளம் நிறைந்த நம் மண் இன்று குண்டுமழையில் குளித்து நம் உறவுகளின் குருதியில் சிவந்துபோய்க் கிடக்கின்றது. நம் வாழ்விடங்கள் எல்லாம் பாழாக்கப்பட்டு அங்கு பாம்பும் பகையும்தான் குடியிருக்கின்றன.
வாரிக்கொடுத்த கைகளெல்லாம் அறுத்தெறியப்பட்டு அநாதரவாய் தெருவில் சிதறிக் கிடக்கின்றன. ஓடியுழைத்த கால்களெல்லாம் ஒடிக்கப்பட்டு ஊனமாகி திராணியற்று நிற்கின்றனர் நம் ஈழ உறவுகள்.கொடுத்தே பழகிய அந்தக் கரங்கள் இன்று கையேந்தி நிற்கின்றன ஒரு நேர கஞ்சிக்காக...!


பிஞ்சுக் குழந்தைகள் என்றும் பாராமல் துண்டு துண்டாய் பிய்த்தெறிகின்றன எறிகணைகள். கருவில் வளரும் தளிரைக் கூட அவை விட்டு வைக்கவில்லை . எறிகணைகளுக்குத்தான் தெரியுமா அவை பிஞ்சா தளிரா என்று? கற்புக்கே கற்பு கற்பிக்கும் ஈழத்தின் பெண்மை அங்கு சீரழிக்கப்படுகிறது.சிங்கள இராணுவத்தினால் கதறக் கதற கற்பழிக்கப்படும் பெண்கள் படும் கொடுமையை கல்நெஞ்சம் கொண்டவர்கூட கண்கொடுத்து பார்க்கமாட்டார். கற்பழிப்பு , காணாமல்போதல், சித்திரவதைகள், படுகொலைகள், பட்டினிச்சாவு, பதுங்குகுழி வாழ்வு என்பவைதான் ஈழத்தமிழரின் இன்றைய உடைமைகள். என்ன கொடுமையிது !!!
ஈழ உறவுகளின் அழுகுரலில் ஆர்ப்பரிக்கின்றது வங்கக்கடல். அவலந்தந்த கண்ணீரில் மூழ்கின்றது முல்லைக் கடல். வந்தோரை வரவேற்று வாழவைக்கும் வன்னிமண், பேரவலம் வந்தேறி பரிதவித்து நிற்கின்றது . வீரம் செறிந்த அந்த மண்ணுக்கும் மக்களுக்கும் இது சோதனைக் காலம். பெருந்துயர்படிந்த வேதனைக் கோலம்.


பேரன்புமிக்க தமிழக உறவுகளே! உங்கள் உறவுகளுக்கு இப் பேரவலத்தினைக் கொடுத்த அந்த பாவிகள் யார்?
சிங்களம் என்றுதான் பதில் வரும். உண்மைதான்! ஆனால் சிங்களம் மட்டுமல்ல. சிங்கள வல்லாதிக்கத்துடன் கூட்டுச்சேர்ந்த பல சக்திகளுங்கூட. அதில் பிரதானமாய் இந்தியா இருப்பது நமக்கெல்லாம் பேரதிர்ச்சி. நம் துயர்துடைக்கும் என்று நாம் நம்பியிருந்த இந்தியாவே நம் உறவுகளை அழிக்க பேராதரவு கொடுத்து நிற்கின்றது சிங்கள அரசிற்கு.


எங்கள் அவலங்களைப் பார்த்து தாங்கொணாமல் நீங்கள் துடிப்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகின்றது பாசமிகு தமிழக உறவுகளே!
தினந்தினம் அநியாயமாய் செத்து மடியும் ஈழத்தமிழ் உறவுகளின் பிணங்களைப் பார்த்து நீங்கள் பதைபதைப்பது நம் கண்களில் தெரிகின்றது. தானாடாவிட்டாலும் தசையாடும் என்பார்கள். தமிழீழத்தின் பிஞ்சுக் குழந்தைகளின் சிதறிய உடல்களைப் பார்த்து கல்நெஞ்சங்கள் கூட கரைந்துதான் போயின. உணர்வுள்ள உங்கள் உள்ளங்கள் உடைந்து வெதும்பின. கண்ணீர் கொப்பளிக்க கதறியழுத ஈரமான உள்ளங்கள் எத்தனையோ. எல்லாவற்றிற்கும் மேலாக, தங்களையே தீயிற்கு ஆகுதியாக்கிய முத்துக்குமார் வழிநடந்த தியாகவீரர்கள் பலர். ஆர்ப்பாட்டங்கள் ,பேரணிகள்,மனிதச்சங்கிலிகள்,உண்ணாவிரதங்கள் என சாதாரண மக்களாக உங்கள் ஈழ உறவுகளின் அவலம் நீக்க, போரை நிறுத்தக்கோரி நீங்கள் செய்த அத்தனைக்கும் நாம் தலை வணங்குகின்றோம்.உங்கள் ஆதரவும் அன்பும் உணர்வும் எங்களுக்கு நன்கே புரியும். அவலத்தின்மேல் அவலப்பட்ட மக்களுக்கு உங்கள் ஆதரவு எரியும் நெருப்பை அணைக்கும் நீராய்த் தோன்றியது. ஆனாலும் சிங்கள வல்லாதிக்கத்தின் பிடிவாதமான போர்வெறியும், தமிழுணர்வுக்கு துளியும் மதிப்புக் கொடுக்காத காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசின் பழிதீர்க்கும் மனப்பாங்கும் சேர்ந்து, உங்கள் போராட்டங்களையெல்லாம் வீணாக்கி விட்டன. உங்களது போராட்டங்களால் விடியல் வரும் என்று காத்திருந்த ஈழத்தமிழருக்கு அவை கானல் நீராகவே போயின.
எதைக்கேட்டாலும், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலையையே புராணம் பாடும் இந்த காந்திய காங்கிரஸ். கங்கிரஸாரிற்கு அதைவிட்டால் வேறு காரணங்கள் கிடையாது. அன்று புலிகள்தான் செய்தார்கள் என்று தாமாகவே முடிவுசெய்த காந்திய காங்கிரஸ், இன்று அதற்கு பழிதீர்க்க அனைத்து தமிழருக்கும் முடிவுகட்ட முண்டியடித்து நிற்கின்றது சிங்களதேசத்துடன், இந்திய அரசு என்னும் அதிகாரத்தோடு. இந்த அதிகாரத்தினை அவர்களுக்கு கொடுத்தவர்கள் நீங்கள்தான் தமிழக உறவுகளே! கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் அளித்த நாற்பதுக்கு நாற்பது ஆசனங்கள்தான் அவர்களை மத்தியில் அதிகார ஆசனத்தில் அமரவைத்தது. ஆனால் நீங்கள் விடுத்த கோரிக்கைகளையெல்லாம் குப்பையில் தூக்கிப் போட்டார்கள். கேட்டும் கேளாமல் இருந்தார்கள். சில சமயங்களில் செவிசாய்ப்பதுபோல் நாடகமாடினார்கள். இந்த நிமிடம் வரைக்கும் உங்கள் உறவுகளுக்கான உங்கள் கோரிக்கைகளுக்கு எதிராகவே நடந்து வருகின்றார்கள்.


தன்னை "தமிழினத் தலைவர்" என சொல்லிக் கொள்ளும் மான்புமிகு தலைவர்களும் அதற்கு உடந்தையாக இருந்தது மிகவும் வேதனைக்குரியது. எதிர்பார்ப்புக்களைக் கொடுத்து ஏமாற்றினார்கள் தம் சுயநலங்களுக்காக. பணத்துக்காகவும் பதவிக்காகவும் உங்கள் ஈழ உறவுகளின் உயிர்களை ஏலம்விட்டார்கள்.தம் குடும்ப நலன்களுக்காக ஈழத்தமிழர் ஒட்டுமொத்தமாக அழிந்தாலும் பரவாயில்லை என கைகழுவி விட்டார்கள். பதவி விலகல்கள், தந்திகள், கட்சிக் கூட்டங்கள், உண்ணாவிரதம் என பலவிதமான கபட நாடகங்களை அரங்கேற்றினார்கள்.இப்படிப்பட்டவர்களுக்கெல்லாம் தீர்ப்பு வழங்க நல்லதொரு சந்தர்ப்பம் உங்கள் முன்றலிலேயே வந்து நிற்கின்றது.


தமிழகம் மீண்டுமொருமுறை நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கத் தயாராகிவிட்டது. இத்தேர்தல் முடிவில் அவலப்படும் ஈழத்தமிழினத்தின் வாழ்வும் தாழ்வும் அடங்கியிருக்கின்றது என்பது தமிழக உறவுகள் நீங்கள் அனைவரும் கருத்தில் கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம்.மீண்டுமொருமுறை காங்கிரஸ் அரசமைக்க நீங்கள் அங்கீகாரம் கொடுப்பீர்களானால் அது ஈழத் தமிழினத்தினை அழித்தொழிக்க நீங்களே அனுமதி கொடுப்பதற்கு சமனாகும்.
சர்வதேசமெங்கும் ஈழ ஆதரவு பெருகிவருகையில் அவற்றின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளிற்கு முட்டுக்கட்டை போடுவதே காங்கிரஸ் அரசுதான். காங்கிரஸின் தமிழின எதிர்ப்புக் கொள்கைகளுக்குள் தமிழகமும் அடக்கப்பட்டு அடங்கிப்போகும் நிலைக்கு தள்ளப்படும்.எனவே,
தமிழினத்துக்கு எதிராகவே எப்பொழுதும் கொள்கை வகுக்கும் காங்கிரஸிற்கு இந்த முறை தகுந்த பாடம் புகட்டுங்கள் தமிழக உறவுகளே!


இவ்வளவு காலமும் கட்சிக்காக ஓட்டுப் போட்டீர்கள்! சாதிக்காக ஓட்டுப் போட்டீர்கள்! மதத்துக்காக ஓட்டுப்போட்டீர்கள்! சலுகைகளுக்காக ஓட்டுப் போட்டீர்கள்! அப்போதெல்லாம் மாறுதல்களோ நன்மாற்றங்களோ வந்ததாக தெரியவில்லை. இம்முறை உங்கள் இனத்துக்காக ஓட்டுப் போடுங்கள்! உங்கள் உறவுகளின் கண்ணீரைத் துடைத்த புண்ணியமாவது உங்களுக்குக் கிடைக்கும்.
ஓட்டுப் போடுவதற்குமுன், சொல்லொணா துயரத்தில் ஏக்கத்துடன் தவிக்கும் ஈழ மக்களின் கண்ணீர் தோய்ந்த முகத்தினை ஒரு தடவை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.உங்கள் மனச்சாட்சியை தொட்டுப் பார்த்து மனிதநேயம் மிக்க மனிதன் என்ற ரீதியில் வாக்களியுங்கள்.


தமிழினம் சாதாரணமான ஒரு இனம் அல்ல. உலக வரலாற்றில் சரித்திரம் படைத்ததும் தொன்றுதொட்டே மேன்மையானதுமான ஒரு இனம். அப்படிப்பட்ட சிறப்புமிக்க தமிழினத்தினை அழிக்க பலவழிகளில் முயல்கின்றன பல நாசகார சக்திகள்.
முதலில் ஈழ தமிழரை குறிவைத்திருக்கும் அந்த நாசகார சக்திகளின் அடுத்த இலக்கு உங்களை நோக்கியும் திரும்பும் எம் தமிழ் தமிழக உறவுகளே!


குறிப்பிட்ட ஒரு கட்சிக்குத்தான் நீங்கள் ஓட்டுப் போடவேண்டும் என்று வற்புறுத்தவில்லை.தமிழின எதிர்ப்புக் காங்கிரஸும் அதன் கூட்டணியும் அல்லாமல் எதற்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள் என்பது கங்கிரஸின் துரோகத்தனத்தினால் செத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு ஈழத்தமிழனினதும் எதிர்பார்ப்பும் பணிவான வேண்டுதலும் ஆகும்.


தமிழக அன்புள்ளங்களே! நாங்கள் உங்களை முழுமையாக நம்புகின்றோம். உங்கள் சொந்தங்கள் அழிக்கப்படுவதைப் பார்த்து துடிதெழுந்தவர்கள் நீங்கள்! உங்கள் உணர்வுகளுக்குமுன் அரசியல் கபட நாடகங்கள், சதிகள் ஜெயிக்காது. ஜெயிக்கவும் விடமாட்டீர்கள் என்பது உறுதி!


ஈழ மக்களின் அவலங்களைப் பார்த்து உருவான உங்களின் மனப்பாரங்களை வாக்குப் பெட்டிகளில் இறக்கிவையுங்கள், காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரான வாக்குகளாய்...!


புலம்பெயர் தேசத்திலிருந்து,
ஒரு ஈழத்தமிழன்,
[பருத்தியன்]

Friday, May 8, 2009

உலகத் தமிழரிடமிருந்து தமிழக வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள்




தமிழக வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள்!



பேரன்புடையீர்,

அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்ந்த ஈழத்தின் வன்னித்தமிழ் மக்களின் வாழ்வியலை முழுமையாகச் சிதைத்து சின்னாபின்னப்படுத்திமிகப்பெரிய மனித அவலத்தில் அவர்களை பலவந்தமாகத்தள்ளியதில் திருமதி சோனியாகாந்தி அம்மையாரின் தலைமையிலான காங்கிரசுக் கட்சிக்கு பெரும் பங்குண்டு.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற வாசகத்ததைப் பயன் படுத்தி முழுத்தமிழினத்தையே அழிக்க திருமதி சோனியாகாந்தி அம்மையார் எடுத்த முடிவு சர்வதேசச் சட்டங்களுக்கு முரணான ஓர் இனப்படுகொலையென்பதை

சர்வதேச நீதிமன்றத்தில் நிரூபிக்கவும் போதிய சந்தர்ப்பம் உண்டு.

உலகிலுள்ள 9 கோடித் தமிழ்மக்களும் விடுத்த அனைத்து வேண்டுகோள்களையும்நிராகரித்த காங்கிரசுக் கட்சி தொடச்சியாக ஈழத்தமிழினத்தை கொலைசெய்யும் சிறிலங்கா அரசுக்கு பக்கபலமாக நிற்பது தவறு என்பதைச் சுட்டிக்காட்ட தமிழக வாக்காளர்களுக்கு அரியசந்தர்ப்பமாக மே 13ம்திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத்தேர்தல் வாய்த்துள்ளது.

தமிழின உணர்வாளர்களே காங்கிரசுக்கட்சிக்கு நீங்கள் வாக்களிக்காமல் விடுவதன்மூலம் திருமதி சோனியாகாந்தி அம்மையாரின் முடிவு தவறானது என்பதைப் புரியவைக்க முடியும்.

தமிழ் நாட்டிலிருந்து இந்திய நாடாளுமன்றத்திற்கு காங்கிரசுக் கட்சி உறுப்பினர் ஒருவர்கூட இம்முறைதேர்ந்தெடுக்கப்படக்கூடாதென்பதே உலகத்தமிழனித்தின் வேண்டுகோளாகும்.

தமிழ்நாட்டுமக்களின் தீர்ப்பையறிய பல நாடுகள் மாத்திரமல்ல ஐக்கியநாடுகள்சபையும் ஆவலாக இருக்கிறதென்பதை கவனத்தில் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

வேண்டுகோளைவிடுக்கும் பதிவு செய்யப்பட்ட அமைப்புக்கள் வருமாறு:-

1.உலகத்தமிழ்ப் பண்பாட்டியக்கம் ஐரோப்பிய ஒன்றியம் ( பதிவு இல:VR.1116)

2.புங்குடுதீவு மறுமலர்ச்சி ஒன்றியம் யேர்மனி (பதிவு இல:- (VR.757)

3.தமிழர் கலாச்சார நற்பணி மன்றம் யேர்மனி (பதிவு: VR.296)

4.சர்வதேசப் புலம்பெயர் தமிழ்எழுத்தாளர் ஒன்றியம் (பதிவு:-VR.5895)

5.தமிழ்மன்றம் யேர்மனி (பதிவு VR-9746)

6..ஈழத்தமிழர் நலன்புரிக்கழகம் யேர்மனி (பதிவு-VR 10369)

7.பாரதிகலைக்கூடம் யேர்மனி (பதிவு-VR-4862)

8.தமிழர் ஒன்றியம் யேர்மனி (VR-10012)

matrum or Manamulla Tamilga thamilan

Eelaa thamilargalin unmai nilai

En uravugale, Please understand the Tamils of Eelaam, this motion picture Directly hits the truth, This is real and true position of People in Eelaam, save our bloods, Great Thanks to Vijay tv and PremGopal thavipudan Thamilan