Thursday, May 14, 2009

இராணுவம் இரசாயன தாக்குதலிற்கு தயார்... பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் பலியாகும் அவலம்...

சிறிலங்கா இரசாயணத் தாக்குதலுக்குத் தயாராகின்றது


சிறிலங்கா இராணுவம் இரசாயணத் தாக்குதலுக்கு தயாராவதாக தெரியவருகின்றது. கடந்த சில மாதாங்களாக மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கையில் பெரும் வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள முடியாது திணறும் சிறிலங்கா இராணுவம் பொது மக்கள் மீது மீண்டும் ஒரு இரசாயணத் தாக்குதலை இன்று அல்லது நாளை மேற்கொள்ளக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவ்வாறான தாக்குதல் ஒன்றுக்கு படையினர் முற்பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் களமுனைச் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. இத்தாக்குதலுக்கு முன்னேற்பாடாக இவ்வாறான ஒரு தாக்குதலை பொது மக்கள் மீதும் இராணுவத்தினர் மீதும் விடுதலைப் புலிகள் மேற்கொள்ளப்போவதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகம் செய்தியொன்றை பரவவிட்டுள்ளது.

இதன் மூலம் விடுதலைப் புலிகளே இவ்வாறான தாக்குதலை நடத்தியதாக கூற முனைவதுடன், பெரும் இன அழிப்பொன்றை மேற்கொள்ளவும் படையினர் தாயாராகி வருகின்றனர். கடந்த மாதம் இவ்வாறான ஒரு இரசாயணத் தாக்குதலை மேற்கொண்டு பெரும் அழிவைப் படையினர் ஏற்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, இந்த அழிவினைத் தடுத்து நிறுத்த புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் காத்திரமான பங்களிப்பை வழங்கவேண்டும் எனவும், சிறிலங்காவின் இந்தப் படுகொலையை உடனடியாகத் தடுத்து நிறுத்த மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட முன்வரவேண்டும் சிறிலங்காவின் போரியல் சட்ட விதிகளுக்கு முரணாக பாவிக்கப்படும் தடை செய்யப்பட்ட ஆயுதப் பாவனைகளுக்கு எதிராக புலம்பெயர்ந்த மக்கள் கிளர்ந்தெழுந்து போராட வேண்டும். அதுவே இந்த மோசமான இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தும்.

thanks to athirvu.com

No comments: