Thursday, May 7, 2009

வன்னி மக்களை பட்டினி அவலத்திலிருந்து காப்பாற்றுங்கள் - An Appeal to the Tamil Youngsters

My dear Tamil youngsters,
Daily we are spending money in many ways, wasting the money and loosing our energy. But our people in Tamileelam suffering every day there in many ways, but presently they are also suffering and longing for food and grains. pls consider the children in Tamileelam. my dear youngstrers this is an appeal to all of you pls donate the money and food grains and compell the world nations and UNO to save our blood relatives.Find some fruitful sources which will save our blood.

anbudan,
Thamilan.


Evidence :
வன்னியில் உள்ள மக்கள் பாரிய பட்டினிச்சாவை எதிர்நோக்கி உள்ளதால், அவர்களை பட்டினியில் இருந்து காப்பாற்றுவதற்கு சர்வதேச சமுகம் மற்றும் மனிதநேய அமைப்புகள் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தினால் வன்னியில் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயப் பகுதியில் தற்போதும் ஒரு இலட்சத்து 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்தப் பகுதியில் உள்ள மக்கள் மீது சிறிலங்கா படையினர் உக்கிரத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் தினமும் பல பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவதுடன் பெருந்தொகையானோர் காயமடைந்தும் வருகின்றனர். இதை சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா போன்றவை உறுதிசெய்தும் உள்ளன.

ஐ.நாவினால் அண்மையில் வெளியிடப்பட்ட செய்மதிப் படத்தின் மூலம் இது மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. படையினர் இப்பகுதி மீது கொத்தணிக் குண்டுகள் மற்றும் எரிகுண்டுகள் என்பனவற்றைப் பயன்படுத்தியும் கனரக ஆயுதங்களைக் கொண்டும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

நேற்றைய தினம் (06.05.2009) குண்டுத் தாக்குதலுக்குப் பயந்து அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனமொன்றுக்குக் கீழ் பாதுகாப்புக்காக ஒழிந்திருந்தவர்கள் மீது எரிகுண்டு வந்து வீழ்ந்ததில் 14 பேர் வரையில் கருகி மரணமடைந்துள்ளனர். இதுபோல் தினமும் பல சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றன.

இந்த நிலையில் தற்போது அங்கு உணவுப் பொருட்கள் ஏதுமற்ற நிலையில் கடுமையான பட்டினி ஏற்பட்டுள்ளது. மக்கள் உணவுக்காக அங்குமிங்கும் அலைந்தும் எந்த உணவும் இல்லாததால் பலர் மயக்கமடைந்த நிலையில் உள்ளனர். சிலர் பட்டினியால் உயிரிழந்தும் வருகின்றனர்.

சிறிலங்கா அரசாங்கம் அங்குள்ள மக்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து வகைகளை அனுப்பாது தொடர்ந்து தடை செய்து வருகின்றது. இதனால் பாரிய மனித அவலம் ஏற்பட்டுள்ளது. கடந்த சித்திரை மாதம் முற்பகுதியில் சிறு தொகை உணவுப் பொருட்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் அதன் பின்னர் எந்தவகையான உணவுப் பொருட்களும் அங்கு சென்றடையவில்லை. ஏற்கனவே ஒரு வேளை கஞ்சியையாவது அருந்தி வந்த மக்கள் தற்போது அதுவுமின்றி உணவுக்காக அலைகின்றனர்.

நீண்ட நாட்களுக்கு முன்னர் அங்கு இயங்கிய அரிசி ஆலைகளில் நிலத்தில் குவிந்து கிடக்கும் அரிசித்தவிட்டை அவர்கள் சேகரித்து அதைக் கரைத்துக் குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மற்றும் ஏதாவது இலைவகைகள், தென்னை, பனை வடலிகளின் குருத்து என்பனவற்றை வெட்டி எடுத்தும் சாப்பிட வேண்டிய பரிதாபகரமான நிலை தோன்றியுள்ளது.

இந்த பட்டினி அவலத்தை சர்வதேச நாடுகள், அந்நாடுகளில் இருந்து கொழும்புக்குச் சென்ற பிரமுகர்கள், சர்வதேச சங்கப் பிரதிநிதிகள் மற்றும் ஐ.நா போன்றவற்றுக்குத் தொடர்ந்து தெரியப்படுத்தி வருகின்றபோதிலும் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

எனவே சிறிலங்கா அரசின் பொய் பிரச்சாரத்தை சர்வதேச நாடுகள் மற்றும் மனித நேய அமைப்புகள் கவனத்தில் கொள்ளாது அங்குள்ள உண்மை நிலையினைக் கண்டறிய பாதுகாப்பு வலயத்திற்கு ஒரு குழுவை அனுப்புவதுடன் தற்போது ஏற்பட்டுள்ள பாரதூரமான பட்டினியைப் போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கும் சிறீலங்கா அரசாங்கம் இணக்கம் தெரிவிக்காத பட்சத்தில் விமான மூலமாகவேனும் அப்பகுதிக்குள் உணவுப் பொருட்களை போடுவதற்கு உரிய ஏற்பாடுகளைச் சம்பந்தப்பட்ட உலக நாடுகள் மற்றும் பொது அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சர்வதேச சமுகம், ஐ.நா மற்றும் பொது அமைப்புகளின் மௌனமும் தாமதமும் சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழின படுகொலையை ஆதரிப்பது போலும் அதற்கு கால அவகாசம் வழங்குவது போலும் உள்ளதாகவே எமக்குத் தென்படுகின்றது.

எனவே சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகள் விரைந்து நடவடிக்கை எடுக்காவிடின் வன்னியில் பாதுகாப்பு வலயத்தில் ஏற்பட்டுள்ள பட்டினிச்சாவு மேலும் அதிகரித்து பாரிய அவலம் ஏற்படவே வழிகோலும்.” என நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

No comments: