Wednesday, November 25, 2009

அன்பு தலைவா உன்னால் நாங்கள் உய்வுற்றோம் தாழ்ந்த தலை நிமிர உன் வழி காட்டல் தேவை தமிழன் நிமிர தமிழ் உயர தமிழ் தலைவன் உன் ஆயுள் பல நுறை தாண்ட எம் ஆயுளையும் தருவோம் நீங்கள் நீண்ட ஆயுளும் திடமான வலுவான உடல்நலமும் பெற உண்மையையும் சத்தியத்தையும் வேண்டுகிறோம்

Tuesday, November 24, 2009

தமிழ் வெல்ல பணி செய்வோம்!

நள்ளிரவில் காதிலெழும் நாதமணிப் பேரொலியில்
நாளை ஒரு பூ மலரும்
நல்ல சுடர் ஏற்றி வைத்து - நாங்கள்
தொழும் போதினிலே
நம்பும்!
நம் எதிரிச் சேனை வீழும்
பள்ளிகொள்ளும் வீரரது கல்லறையில் கண் சொரிந்து
மணி ஒலிகள் ஒலி எழுப்பி
மாவீரர் புகழ் பாட
தலைவன் உரை முடிந்தவுடன்
தமிழீழம் மலர்ந்ததென்று
தரணியெங்கும் வானுயர்ந்த புலிக்கொடிகள்
தலை நிமிர்ந்து ஆசைந்து ஆட
உள்ளம் உருகி, உணர்வோடு
உத்தமர்கள் துயிலுகின்ற
கல்லறையில்
நாங்கள்
கார்த்திகைப் பூச் சொரிந்து
தேசியத்தின் உயிரானவர்கள்
தேசத் தலைவனுடன்....செய்த பெரும்
ஈகமதை
பாடித் தினம் போற்றி
பாரெல்லாம்
தமிழ் வெல்ல
பணி செய்வோம்!


நன்றி - இன்போ தமிழ்