Saturday, December 4, 2010




சகோதரர்களே உம் வீரம், உள அறிவு, ஒற்றுமை தமை கண்டு உள்ளம் மகிழ்தோம், பெருமிதம் கொண்டோம்

சகோதரர்களே உம் வீரம், உள அறிவு, ஒற்றுமை
தமை கண்டு உள்ளம் மகிழ்தோம், பெருமிதம் கொண்டோம்
உமை போலே எம்மாலிருக்க இயலவில்லையே
என வெட்கத்தால் தலை தாழ்ந்தோம்

உமை எருமை என்றார்கள்,
உன்னை கொட்டி என்றார்கள்
வெட்டி பயல்கள் என்றார்கள் .
முதுகெலும்பு இல்லாதவர்கள் என்றார்கள்


பார்த்தார்களே உன் தாயக அடங்காப் பற்றை
ஓடவே வழியில்லாமல் பிச்சை எடுத்து உயிரை காத்து கொண்டார்கள் .

மீண்டும் ஒருமுறை சொல்கிறேன்
உம் வீரம் கண்டு உள அறிவு, ஒற்றுமை
தமை கண்டு உள்ளம் மகிழ்தோம்,பெருமிதம் கொண்டோம்
உமை போலே எம்மாலிருக்க இயலவில்லையே
என வெட்கத்தால் தலை தாழ்ந்தோம்

(என்ன செய்ய உங்களுக்கு வாய்த்த தலைவன் போல் எமக்கில்லையே எம்மை காட்டி மற்றும் கூட்டி கொடுக்கவும் மற்றுமே தகுதியானவர்கள் தலைவர்களாக உள்ளனர் )

Thursday, December 2, 2010

விலங்கு மகனே உன்னை உள்ளேவும் வைப்போம்


சரணடைந்த மக்களை கொல்வாரம்
போராளிகளை கொல்வாரம்
பெண்களின் கற்ப்பை சுரையாடுவார்களாம்
குழந்தைகளின் மேல் பாஸ்பரஸ் குண்டு வீசுவார்களாம்
பரதேசி நாய்களாட நாங்கள்
பெரும்புலிகள், வரிப்புலிகள் (மக்களே புலிகள், புலிகளே மக்கள்)
நாங்கள் மீளவும் நாள் வரும், நாயே
நீ நாறவும் உன் கருவறுக்கவும் தேதி வரும்
அன்று உன் கடன் முடிப்போம் அது வரை இன்று போல்
நாயே உன்னை அங்கேய உட்க்கார வைப்போம்
உளியடிப்போம் விலங்கு மகனே உன்னை உள்ளேவும் வைப்போம்

Wednesday, December 1, 2010

அவனை இங்கிலாந்திலே கைது செய்ய வைப்போம்(வீடியோவை பர்ர்க்க இங்கே சுண்டவும்)

http://link.brightcove.com/services/player/bcpid69900095001?bctid=693375798001

என்ன கொடும்மையா இது எத்தன மக்கள் இப்படியே மரிக்கிறது அந்த வீடியோவ பாக்ககிகே மவன சும்மா விட கூடாது, நண்பர்களே ஒரு

வேண்டுகோள் இது தான் நமக்கு வாய்த நல்ல சந்தர்ப்பம் பிணம்திண்ணி மகிந்தாவை இங்கிலாந்தை விட்டு வெளியேற விடாமல் சுற்றி வளையுங்கள் அவன் இருக்கும் இடம் விட்டு நகர விடாமல் கேரோ செயுங்கள், அவனை இங்கிலாந்திலே கைது செய்ய வைப்போம்
ஆக்ஸ்போர்ட் யூனியன் போவதை ரத்து செய்து நாட்டை விட்டு தப்பி ஓட பார்க்கிறான் விடாதீர்கள் நண்பர்களே

Friday, November 26, 2010

அன்பு தலைவா வாழிய பல்லாண்டு


மாவீர தலைவா, மானமிகு மறவா!
மாநில மங்கை நல்லாள் மட்டுமல்ல
இம் மாநிலத்துள்லோரும் உன் மீது குலவிய
காற்று வர காத்திருக்கிறோம்
தலைவன் வருகிறான் தலைவன் வருகிறான் என
பறை சாற்ற எங்கள் கைகள் துடிக்கின்றன

தலைவா தமிழ் உள்ள வரை, நல்ல தமிழன் என்பவன் உள்ளவரை என்றும் அழியாது உன் புகழ்,

வாழ்க எம் தந்தையே
வாழ்க எம் தமிழின தலைவனே
நீடூழி வாழ்க

Friday, November 19, 2010

2010 மாவீரர்கள் நினைவு கூறல் வாரம்


வாழ்க மாவீரர் தம் புகழ்
எழுக தமிழீழம்

Thursday, June 24, 2010

உலகத் தமிழர்களுக்கு ஒரு அவசர வேண்டுகோள்:

தமிழ் மக்களுக்கும், நாளிதழ்களுக்கும் ஒரு வேண்டுகோள் இலங்கையில் போரின் போது நடைபெற்ற குற்ற செயல்களின் உண்மை நிலையை ஆராயும் குழு ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை நிறுவியுள்ளதை யாவரும் அறிவோம். இவர்களை இலங்கைக்குள் அனுமதிக்கப்போவது இல்லை என மகிந்த அரசு அறிவித்துள்ளது. அதனால் இக் குழு இலங்கை சென்று தனது ஆதாரங்களைத் தேடாமல், மக்களால் கொடுக்கப்படும் ஆதாரங்கள் மற்றும் உண்மைச் சம்பவங்களைப் பதிவுசெய்யும் வாய்ப்பு கிட்டியுள்ளது எனலாம். நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் புகைப்படங்கள், ஆவணங்கள் போன்றவற்றை வைத்திருப்போர் உடனடியாக இக் குழுவை மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளலாம்

இந்தோனேஷியாவின் முன்னாள் சட்ட மா அதிபர் மர்சுகி தருஸ்மன் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவில் அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டீவன் ரட்ணர், தென்னாபிக்காவின் உண்மை நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவில் பணியாற்றியவரும் அந்த நாட்டை சேர்ந்தவருமான யஸ்மின் சூகா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

எனவே ஒவ்வொரு தமிழர்களும் அக்குழுவினர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக போர்க்குற்ற புகைப்படங்களையும், காணொளிகளையும், ஆவணங்களையும் அனுப்பி வைப்போம். ஒவ்வொரு இணையத்திலும் இச்செய்தியினை வெளியிடுமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறோம், இதில் வேறுபாடுகளை மறந்து தமிழினத்துக்காக, அங்கே கொல்லப்பட்ட 40,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எமது உறவுகளுக்காக இதை நாம் உடனே செய்தாகவேண்டும். மேலும் நண்பர்களுக்கும், தமிழ் உறவுகளுக்கும் இந்த மின்னஞ்சல்களை தெரியபடுத்தவும்.

இச் செய்தியினை வெளியிடாத தமிழ் இணையங்களின் வாசகர்கள் ஏன் இச் செய்தியை வெளியிடவில்லை என்பதை வெளியிடாத இணையங்களிடம் கேளுங்கள். சகல தமிழ் இணையங்களும், ஐ.நா.சபையின் நிபுணர் குழுவுக்கு மின்னஞ்சல் அனுப்பும் இவ்விடையத்தை செய்தியாகபிரசுக்கவும்.



1) Ms. Sooka Yasmin
Executive Director
Foundation for Human Rights

Her E-Mail: YSooka@fhr.org.za


2)Mr. Steven R. Ratner
Bruno Simma Collegiate Professor of Law,
University Of Michigan Law School,
United States of America

His E-mail: sratner@umich.edu


3)Mr. Marzuki Darusman
c/o: Office of the Secretariat,
Working Group for an ASEAN Human Rights Mechanism
Office and Mailing Address:
Ground Floor, Ateneo Human Rights Center
Ateneo Professional Schools , 20 Rockwell Drive ,
Rockwell Center , 1200 Makati City ,
Metro Manila , Philippines

His E-mail: info@aseanhrmech.org



அதிர்வு. காம் க்கு நன்றி

Wednesday, June 16, 2010

தமிழ் செம்மொழி மாநாடு இரங்கற்பா


இறப்பொக்கும் எல்லா உயிரும்
இறந்த பின்னர்
ஏது ஊரே.ஏ…ஏ…ஏ
யாவரும் சவங்கள்
உண்பது வரிசை
உடுப்பது கிழிசல்
உறைவிடமெங்கே முள்வேலி
செத்துப் பிழைத்தோ…தோ…தோம்
பிழைத்தும் சாவோம்…வோ…வோ…வோம்
தீதும் சூதும்
பிறர் தர வாழு எனும்
நன்மொழியே நம் பொன்மொழியாம்
அ..அ..ஆ…ஆ..ஆ…
சிறு குழந்தை முதல்
பேரிளம் பெண்களும் வரையிலே
உடம்பினை புணர்ந்து
கூறுபோடும்
விகாரைகள், மகா வம்சங்கள்
முள்வேலிக்குள் நீளும் கைகள்
ஒலிக்கின்ற அழுகுரலும்,வதைகளும்,
பசிக்கின்ற வயிறுகளும்,
மறைக்கின்ற அறிக்கைகளும்ம்ம்ம்ம்
அ..அ..ஆ…ஆ..ஆ…
செம்மொழியான தமிழ்மொழியாம்
செம்மொழியான தமிழ்மொழியாம்
அ..அ..ஆ…ஆ..ஆ…
செம்மொழியான தமிழ்மொழியாம்
செம்மொழியான தமிழ்மொழியாம்
செம்மொழி. செம்மொழி
தமிழ்மொழி தமிழ்மொழி அ..அ..ஆ…ஆ..ஆ…
குட்டிமணி முதல்
முத்துக்குமார் வரை
செத்துப் போனவர்
எத்தனையோ எத்தனையோ
ஓ…ஓ…ஓ…ஓ
ஓ…ஓ…ஓ…ஓ
இரண்டு லட்சம் பேர்
குருதியில் சிவந்த மொழி
எங்கள் மொழி தமிழ் மொழியாம்
செம்மொழியான
தமிழ் மொழியாம்ம்ம்ம்ம்ம்
அ..அ..ஆ…ஆ..ஆ…

Monday, May 17, 2010

எங்கள் அண்ணாக்கள் அக்காக்கள் எங்கே…???!

உறுமும் அந்தப் புலிக்கொடி தாங்கி
வந்த எங்கள் அண்ணாக்கள் எங்கே.. அக்காக்கள் எங்கே..??!

களப்பலியாய் போனவர் போகட்டும்
அவர்களெம் மாவீரச் செல்வங்களாய்
எம்மோடு வாழ்வது உறுதி..!
ஆனால்..
சுதந்திர தேச வேட்கை கொண்டு வேங்கைகளாய்
உலா வந்த இந்த மானத் தமிழர்கள் தான் எங்கே..???!

கவிபாடும் தமிழ் சொல்லாலே
புலியெனப் பாய்ந்த
புதுக்கவிஞன் புதுவை அண்ணன் எங்கே..??!

“ஆழ்ந்து யோசி ஆராய்ந்து பேசு” என்ற சொல்லை வகுத்து
ஈரோஸின் பிறப்போடு உறவெடுத்து
புலிப் பாசறை புகுந்த அந்த அரசியல் வித்தகன்
பாலகுமாரன் அண்ணன் எங்கே..??!

திருநெல்வேலி முதற் தாக்குதலின் களப்பலி
அவன் பொன்னமான் தம்பி
தமிழீழ அரசியல் தத்துவஞானி
எங்கள் யாழ் இந்துவின் மைந்தன் யோகி அண்ணன் எங்கே..??!

இளம்பிறையாய் யாழ் வீதி எங்கும் ஓடோடி
அரசியல் கருத்துரைத்து
இளைய நெஞ்சங்களில் இடம்பிடித்த
அந்த இளம்பரிதி அண்ணன் எங்கே..??!

தெந்தமிழீழம் தந்த களத்தளபதி
இராணுவப் பேச்சாளன்
உலக ஊடகங்களின் கவனக் கவர்வான்
இளந்திரையன் அண்ணன் அவன் எங்கே..??!

தமிழீழத் தலைநகராம்
திருமலையின் நிர்வாகி
எழில் மிகு நகரின் தளபதி
எழிலன் அண்ணன் எங்கே…??!

இப்படி எத்தனையோ அண்ணாக்கள்
நேற்று வரை எம்மோடு உறவாடிய
எங்கள் பாச உறவுகள் எங்கே..??!
இனிய தமிழ் பேசி எம் இதயங்களில் வாழ்ந்த
தமிழினிய அக்காக்கள் எங்கே..??!

சிங்களச் சிறை சென்றாரோ
புத்த மைந்தன் மகிந்தவின்
சித்திரவதைக்கு இரையாகிப் போனாரோ..??!

சொந்தங்களை
விலைமதிப்பில்லா அந்தச் செல்வங்களை
தொலைத்துவிட்டுத் தேடுகிறேன்
எங்கள் உறவுகள் எங்கே..??!

கண்டவர் சொல்வரோ
காட்டிக் கொடுத்தோர் இரங்குவரோ..??!
இன்றேல்
மண் வாரி வசை பாடுவரோ
கல் வாரி என் தலை மீது விட்டு எறிவரோ…??!
எனக்குக் கவலை இல்லை..!
என் அண்ணன்கள் அக்காக்கள் எங்கே..??!

காலமே பதில் சொல்
நான் அவர்களை உயிரோடு
காண வேண்டும்
என் சுதந்திர தேசத்தின்
தேச பிதாக்களை
தரிசிக்க வேண்டும்..!

அவர்கள் மூச்சாய் வாழும்
தமிழீழக் காற்றே
தேடி வந்து ஒரு சேதி சொல்
என் சொந்தங்களைக்
கண்டதாய்.. உயிரற்ற உடலாய் அன்றி
உயிரோடு கண்டதாய் சொல்..!
காத்திருக்கிறேன்..
விழி எங்கும் நீர் நிறைய…!!!


நன்றி குருவிகளே
http://kuruvikal.wordpress.com/

Friday, January 8, 2010

மன்னனாய் முடி சூட வர வேண்டும்..!!


இனிய புன்னகையுடன் எம்மோடு,,
இரண்டறக்கலந்த தானைத்தலைவனே...!!!

கம்பீர நடைக்கு சொந்தமான கரிகாலனே..!!
கண்ணான எங்கள் காவல் தலைவனே...!!

மதியூக சக்கரவர்த்தியே...!!
மக்கள் மனங்களில் வாழ்ந்தது கொண்டிருக்கும்
மன்னாதி மன்னனே...!!

வல்லமையின் தோன்றலே...!!
வல்வெட்டித்துறையின் மைந்தனே...!!

தமிழீழ மக்களின் பொக்கிஷமே...!!
தமிழர்கள் போற்றும் தங்கத்தலைவனே..!!

சிங்களவனுக்கு பேரிடி கொடுத்த...முழக்கமே...!!
சிரிப்பிலே பதில் சொல்லிடும் செம்மலே..!!

தமிழனைத்தலை நிமிர வைத்த மறவனே...!!
தங்கத்தமிழீழ முதல்வனே..!!

தரணி எங்கும் உன் புகழ் ஒலிக்குதே...
தன்மானத்தமிழனே...!!
உன் நாமம் வாழுமே...என்றென்றும்..
உயிரிலே கலந்த தெய்வமே...!!

துரோகங்களை தாங்கிய அஞ்சா நெஞ்சனே..!!
துணிவினை ஊட்டி போராட,, வைத்த தெய்வமே..!!

வீரத்தின் புது இலக்கணமே...!!
விஷ்வரூபம் எடுத்து விரைவில் வர வேண்டும் ..!!

விதண்டாவாதம் பேசும் விஷக்கிருமிகளின் பேச்சினை அடக்க
விரைவாக வந்திட வேண்டும்..!!

மலர போகின்ற தமிழீழத்திற்கு,,
மன்னனாய் முடி சூட வர வேண்டும்..!!

சோழ பரம்பரை வழி வந்த தேசியத்தலைவா...!!
சோகம் நீக்கிட நீங்கள் வர வேண்டும்..!!

உங்களின் குரல் கேட்க.., ஊசலாடும் உயிரோடும்,
உணர்வோடும் காத்திருக்கும்,,
உங்கள் அன்பின் தழிழீழ மக்கள்.... (நன்றி - வன்னிஆன்லைன்.காம்)


தமிழீழ மக்கள் மட்டுமல்ல தமிழகத்திலிருந்தும் இது தான் எங்கள் வேண்டுதல்

- தமிழன்