Wednesday, June 16, 2010

தமிழ் செம்மொழி மாநாடு இரங்கற்பா


இறப்பொக்கும் எல்லா உயிரும்
இறந்த பின்னர்
ஏது ஊரே.ஏ…ஏ…ஏ
யாவரும் சவங்கள்
உண்பது வரிசை
உடுப்பது கிழிசல்
உறைவிடமெங்கே முள்வேலி
செத்துப் பிழைத்தோ…தோ…தோம்
பிழைத்தும் சாவோம்…வோ…வோ…வோம்
தீதும் சூதும்
பிறர் தர வாழு எனும்
நன்மொழியே நம் பொன்மொழியாம்
அ..அ..ஆ…ஆ..ஆ…
சிறு குழந்தை முதல்
பேரிளம் பெண்களும் வரையிலே
உடம்பினை புணர்ந்து
கூறுபோடும்
விகாரைகள், மகா வம்சங்கள்
முள்வேலிக்குள் நீளும் கைகள்
ஒலிக்கின்ற அழுகுரலும்,வதைகளும்,
பசிக்கின்ற வயிறுகளும்,
மறைக்கின்ற அறிக்கைகளும்ம்ம்ம்ம்
அ..அ..ஆ…ஆ..ஆ…
செம்மொழியான தமிழ்மொழியாம்
செம்மொழியான தமிழ்மொழியாம்
அ..அ..ஆ…ஆ..ஆ…
செம்மொழியான தமிழ்மொழியாம்
செம்மொழியான தமிழ்மொழியாம்
செம்மொழி. செம்மொழி
தமிழ்மொழி தமிழ்மொழி அ..அ..ஆ…ஆ..ஆ…
குட்டிமணி முதல்
முத்துக்குமார் வரை
செத்துப் போனவர்
எத்தனையோ எத்தனையோ
ஓ…ஓ…ஓ…ஓ
ஓ…ஓ…ஓ…ஓ
இரண்டு லட்சம் பேர்
குருதியில் சிவந்த மொழி
எங்கள் மொழி தமிழ் மொழியாம்
செம்மொழியான
தமிழ் மொழியாம்ம்ம்ம்ம்ம்
அ..அ..ஆ…ஆ..ஆ…