Saturday, December 4, 2010




சகோதரர்களே உம் வீரம், உள அறிவு, ஒற்றுமை தமை கண்டு உள்ளம் மகிழ்தோம், பெருமிதம் கொண்டோம்

சகோதரர்களே உம் வீரம், உள அறிவு, ஒற்றுமை
தமை கண்டு உள்ளம் மகிழ்தோம், பெருமிதம் கொண்டோம்
உமை போலே எம்மாலிருக்க இயலவில்லையே
என வெட்கத்தால் தலை தாழ்ந்தோம்

உமை எருமை என்றார்கள்,
உன்னை கொட்டி என்றார்கள்
வெட்டி பயல்கள் என்றார்கள் .
முதுகெலும்பு இல்லாதவர்கள் என்றார்கள்


பார்த்தார்களே உன் தாயக அடங்காப் பற்றை
ஓடவே வழியில்லாமல் பிச்சை எடுத்து உயிரை காத்து கொண்டார்கள் .

மீண்டும் ஒருமுறை சொல்கிறேன்
உம் வீரம் கண்டு உள அறிவு, ஒற்றுமை
தமை கண்டு உள்ளம் மகிழ்தோம்,பெருமிதம் கொண்டோம்
உமை போலே எம்மாலிருக்க இயலவில்லையே
என வெட்கத்தால் தலை தாழ்ந்தோம்

(என்ன செய்ய உங்களுக்கு வாய்த்த தலைவன் போல் எமக்கில்லையே எம்மை காட்டி மற்றும் கூட்டி கொடுக்கவும் மற்றுமே தகுதியானவர்கள் தலைவர்களாக உள்ளனர் )

No comments: