Friday, January 8, 2010

மன்னனாய் முடி சூட வர வேண்டும்..!!


இனிய புன்னகையுடன் எம்மோடு,,
இரண்டறக்கலந்த தானைத்தலைவனே...!!!

கம்பீர நடைக்கு சொந்தமான கரிகாலனே..!!
கண்ணான எங்கள் காவல் தலைவனே...!!

மதியூக சக்கரவர்த்தியே...!!
மக்கள் மனங்களில் வாழ்ந்தது கொண்டிருக்கும்
மன்னாதி மன்னனே...!!

வல்லமையின் தோன்றலே...!!
வல்வெட்டித்துறையின் மைந்தனே...!!

தமிழீழ மக்களின் பொக்கிஷமே...!!
தமிழர்கள் போற்றும் தங்கத்தலைவனே..!!

சிங்களவனுக்கு பேரிடி கொடுத்த...முழக்கமே...!!
சிரிப்பிலே பதில் சொல்லிடும் செம்மலே..!!

தமிழனைத்தலை நிமிர வைத்த மறவனே...!!
தங்கத்தமிழீழ முதல்வனே..!!

தரணி எங்கும் உன் புகழ் ஒலிக்குதே...
தன்மானத்தமிழனே...!!
உன் நாமம் வாழுமே...என்றென்றும்..
உயிரிலே கலந்த தெய்வமே...!!

துரோகங்களை தாங்கிய அஞ்சா நெஞ்சனே..!!
துணிவினை ஊட்டி போராட,, வைத்த தெய்வமே..!!

வீரத்தின் புது இலக்கணமே...!!
விஷ்வரூபம் எடுத்து விரைவில் வர வேண்டும் ..!!

விதண்டாவாதம் பேசும் விஷக்கிருமிகளின் பேச்சினை அடக்க
விரைவாக வந்திட வேண்டும்..!!

மலர போகின்ற தமிழீழத்திற்கு,,
மன்னனாய் முடி சூட வர வேண்டும்..!!

சோழ பரம்பரை வழி வந்த தேசியத்தலைவா...!!
சோகம் நீக்கிட நீங்கள் வர வேண்டும்..!!

உங்களின் குரல் கேட்க.., ஊசலாடும் உயிரோடும்,
உணர்வோடும் காத்திருக்கும்,,
உங்கள் அன்பின் தழிழீழ மக்கள்.... (நன்றி - வன்னிஆன்லைன்.காம்)


தமிழீழ மக்கள் மட்டுமல்ல தமிழகத்திலிருந்தும் இது தான் எங்கள் வேண்டுதல்

- தமிழன்

Wednesday, November 25, 2009

அன்பு தலைவா உன்னால் நாங்கள் உய்வுற்றோம் தாழ்ந்த தலை நிமிர உன் வழி காட்டல் தேவை தமிழன் நிமிர தமிழ் உயர தமிழ் தலைவன் உன் ஆயுள் பல நுறை தாண்ட எம் ஆயுளையும் தருவோம் நீங்கள் நீண்ட ஆயுளும் திடமான வலுவான உடல்நலமும் பெற உண்மையையும் சத்தியத்தையும் வேண்டுகிறோம்

Tuesday, November 24, 2009

தமிழ் வெல்ல பணி செய்வோம்!

நள்ளிரவில் காதிலெழும் நாதமணிப் பேரொலியில்
நாளை ஒரு பூ மலரும்
நல்ல சுடர் ஏற்றி வைத்து - நாங்கள்
தொழும் போதினிலே
நம்பும்!
நம் எதிரிச் சேனை வீழும்
பள்ளிகொள்ளும் வீரரது கல்லறையில் கண் சொரிந்து
மணி ஒலிகள் ஒலி எழுப்பி
மாவீரர் புகழ் பாட
தலைவன் உரை முடிந்தவுடன்
தமிழீழம் மலர்ந்ததென்று
தரணியெங்கும் வானுயர்ந்த புலிக்கொடிகள்
தலை நிமிர்ந்து ஆசைந்து ஆட
உள்ளம் உருகி, உணர்வோடு
உத்தமர்கள் துயிலுகின்ற
கல்லறையில்
நாங்கள்
கார்த்திகைப் பூச் சொரிந்து
தேசியத்தின் உயிரானவர்கள்
தேசத் தலைவனுடன்....செய்த பெரும்
ஈகமதை
பாடித் தினம் போற்றி
பாரெல்லாம்
தமிழ் வெல்ல
பணி செய்வோம்!


நன்றி - இன்போ தமிழ்

Saturday, November 21, 2009

மாவீரர் நினைவுகூறல் இன்றிலிருந்து ஆரம்பம்


மண்ணை நேசித்த மானமாவீரர்களுக்கு எங்கள் வீர வணக்கம்

Thursday, November 19, 2009

தீயில் வெந்த தியாகமே


தீயில் வெந்த தியாகமே
இந்நாளில் உன்னை நினைத்து
உள்ளுறுதியை மேலும்
உரமேற்றுவோம்


தீராது தாயக விடுதலை தாகம் அதை அடையும் வரை
குறையாது எங்கள் வேகம்

Saturday, November 14, 2009

மான மாவீர்களுக்கு வீர வணக்கம்

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே!
இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? குழியினுள் வாழ்பவரே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்.

நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே நாமும் வணங்குகின்றோம்
உங்கள் கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்
சாவரும் போதிலும் தணலிடை வேகிலும் சந்ததி தூங்காது
எங்கள் தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்.

உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது உரைத்தது தமிழீழம்
அதை நிரை நிரையாகவே நின்றினி விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர(சு) என்றிடுவோம்
எந்த நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்

Friday, August 21, 2009

உலக தமிழர் பிரகடனம்




உலகத் தமிழர் பிரகடனம் வருமாறு :

1. ஈழத் தமிழ் மக்களின் மரபு வழி தாயகத்தில் அவர்களுக்கு முழுமையான மனித, ஜனநாயக உரிமைகள் வழங்கிடவும், அதற்கேற்ற அரசியல் அமைப்பிற்கு உத்தரவாதம் தரக்கூடிய அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காக உலக மக்களின், அரசுகளின் ஆதரவைத் திரட்டிடவும், ஈழத் தமிழ் மக்கள் ஒப்புக்கொள்ளக் கூடியத் தீர்வு ஒன்றை அவர்களின் பிரச்சனையைத் தீர்க்கும் ஒரே வழி என்பதிலும் நாங்கள் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.

2. தங்கள் தாயகத்திலும், உலக நாடுகளிலும் புலம் பெயர்ந்திருக்கக்கூடிய ஈழத் தமிழர்கள் அனைவரும் அவரவர்களின் ஊர்களிலும், வீடுகளிலும் மீண்டும் குடியேறவும், அமைதியான, இயல்பான, சுதந்திரமான வாழ்க்கையை நடத்தவும் துணை நிற்க நாங்கள் உறுதி பூணு‌கிறோ‌ம்.

3. தமிழர் தாயக மண்ணில் அத்துமீறி உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களையும், சிங்கள இராணுவ முகாம்களையும் மற்றும் இராணுவ ரீதியான அமைப்புகளையும் வெளியேற்ற வேண்டும் என ஐ.நா.வை வற்புறுத்த நாங்கள் உறுதி பூணுகிறோம்.

4. இலங்கையில் மனித நேய உணர்வை மீறித் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளையும், கொலைகளையும் செய்த சிங்கள இராணுவ அதிகாரிகளும், அவர்களை ஏவிவிட்ட சிங்கள அரசியல் வாதிகளும் சர்வதேச நீதிமன்றத்தில் போர்க் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவதற்கு உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள நாங்கள் உறுதி பூணுகிறோம்.

5. உலகில் உள்ள மற்ற தேசிய இன மக்களைப் போல முழுமையான, இறைமை உள்ள மக்களாக வாழும் உரிமையில் தங்களின் எதிர்காலத்தை தாங்களே முடிவு செய்துகொள்ளும் உரிமையும் ஈழத் தமிழர்களுக்கு இயற்கையாக உண்டு என்பதையும் அந்த வாழ்வுரிமையை அவர்கள் நிலைநிறுத்திக்கொள்ள அவர்களுக்கு தோள் கொடுத்து துணை நிற்க உலகத் தமிழர்களாகிய நாங்கள் உறுதி பூணுகிறோம்.

6. அளப்ப‌ரிய தியாங்களைச் செய்த ஈழத் தமிழ் மக்களும், அவர்களுக்காக இறுதிவரை போராடிய போராளிகளும், வீறுகொண்டு நடத்திய விடுதலைப் போராட்டம் பல நாடுகளின் கூட்டுச் சதியின் விளைவாக பின்னடைவைச் சந்திக்க நேர்ந்திருப்பது தற்காலிகமானது. மீண்டும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதற்கும், வெற்றி பெறுவதற்கும் அந்த மக்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வு உருவாவதற்கும் நாங்கள் முழுமையாக உதவுவோம். அதற்காக எங்களை முற்றிலுமாக ஒப்படைத்துக்கொண்டு எத்தகைய தியாகத்திற்கும் தயாராக இருப்போம் என உலகளாவிய தமிழர்களாகிய நாங்கள் உறுதி பூணுகிறோம்.